No icon

திருத்தந்தை

`அவனியில் அமைதி’ திருமடலை அனைவரும் படிப்போம்

உயிர்த்த கிறிஸ்துவின் மகிழ்ச்சியால் நிரம்பிய சகோதரர் சகோதரிகளே, நாம் ஒன்றிணைந்து பயணிக்கும் திருஅவையாக வாழ்வதற்கான அருளை ஆண்டவரிடத்தில் கேட்போம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கேட்டுக்கொண்டார்.

ஏப்ரல் 12,  புதனன்று, தான் வெளியிட்ட குறுஞ்செய்திகளில் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதர்களின் குழுமம் முன்முயற்சி எடுத்து அமைதி மற்றும் இரக்கத்தின் நற்செய்தியை அறிவிக்க உறுதிகொண்டது என்றும் தெரிவித்தார்.

திருத்தந்தை புனித 23-ஆம் யோவான் அவர்கள், ‘அவனியில் அமைதிஎன்ற திருமடலை வெளியிட்டதன் 60-ஆம் ஆண்டு நிறைவுறும்வேளை, முன்னெப்போதையும் விட இத்திருமடல் இக்காலத்திற்கு மிகவும் பொருத்தமுடையதாக உள்ளதால், இதனை அனைவரையும் படிக்க அழைப்பதாகவும், இதன் அடிப்படையில், திட்டங்களையும் முடிவுகளையும் ஊக்குவிக்க நாடுகளின் தலைவர்கள் அனுமதிக்க வேண்டும் என்று தான் இறைவேண்டல் செய்வதாகவும் தெரிவித்தார்.

Comment